ஓம் அகத்தீசாய நம:
ஆசான் அகத்தியரின் கொத்தடிமை, அருளன்னை ஆதிசக்தியின் அருள் அடிமை ஞானச்சித்தர் விஜயகுமார் தம் 15- வது வயதில் சித்தர்களின் வாலை தெய்வத்தின் சூட்சம உயிர்க்கலப்பால் ஞானத்தை உணர்ந்தவர்.
தன் பூர்வஜென்ம புண்ணிய பலத்தால் மகான் ஆறுமுக அரங்கமா தேசிகரின் ஆதிசீடர், முதல்சீடர் எனும் அங்கீகாரத்தை பெற்றவர். மகான் அகத்தியரின் திருவடி பூஜை செய்து வாசி வழி நடந்து பல யோக, ஞான ரகசியங்களை அறிந்தவர். மகான் வேதாத்திரி மகரிஷி வழிமுறையில் தவசித்தி கண்டவர்.
இவரின் அருள் உரைகள் அனைத்தும் அருளன்னை ஆதிசக்தி மற்றும் சித்தர்களே இவர் உள்ளிருந்து உலகோர் நன்மை அடைய உபதேசிப்பதாகும்.
இவர் சொற்பொழிவை பார்ப்பது, கேட்பது, சிந்திப்பது, பகிர்வது, பேசுவது அனைத்தும் நம் புலன்களின் வழியே ஆன்மாவை சென்றடைந்து ஆன்மாவை தெளிவடையச் செய்யும்.
இவர் உபதேசிக்கும் கொள்கைகளை கடைபிடிப்போர் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்ப்புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வர் என்பதுடன் முறையாய் பின்பற்றி நடக்க இல்லறமும், துறவறமும் சிறந்து வீடுபேறு எனும் ஜீவ முக்தியை அருளும் என்பதில் ஐயமில்லை.