SARGURU'S OWN EARTH 🌎 சற்குரு மனித அவதாரம் எடுத்த புனித பூமி இது.
சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து
வளர்ந்து, பாமரனாகவே வலம் வந்து
இறைவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமி.
"கணக்கன்பதி எனும் கணக்கன்பட்டி "
சற்குருவின் குரல்
"காசிக்கு போனாலும் கர்மம் தீராது
கணக்கன்பட்டி மண்ணுல புரண்டவனுக்கு பாவம் ஒட்டாதுடா சாமி" கணக்கன்பட்டி மண்ணும் பேசும் டா சாமி, இந்த வாசலுக்கு வந்தவர் வெறுங் கையுடன் திரும்புவதில்லை, உலகத்துக்கே வெளிச்சம் காட்டுற இடம், இதுவே பிரபஞ்சத்தின் தலைவாசல், என்று பகவான் இந்த மண்ணின் பெருமையை கூறியுள்ளார்.மேலும் எவ்வுயிரானாலும் இந்த மண்ணில் கால்தடம் பதிக்காது அவர்களது வாழ்க்கை நிறைவு ஆவதில்லை.ஆக, நாம் நமது வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த புனித பூமியை பணிந்து வணங்கிடல் ஆகச் சிறந்தாகும்.