"சிவகுரு" சிவதாமோதரன் ஐயாவின் காந்த குரலில் தேன் தமிழ் திருவாசகம் சேர்ந்து பாடுவோம், திருக்கழுக்குன்றம்.
"சிவகுரு" அவர்கள் இளமை முதலே சைவத்தின்பால் மாறாப்பற்றும் ஆராக்காதலும் கொண்டவர், 'சிவமே' மெய்ப்பொருள் எனறெண்ணி வாழ்பவர்.
'நிதியமாவன நீறுகந்தான் நீள்கழல்களே' என சிந்தித்து ஒழுகுபவர்.தம்மைச்சார்ந்தாரையும் அவ்வாறே ஒழுகத் தூண்டுபவர். சைவத் திருமுறைகள்பால் அளவிலா ஈடுபாடு கொண்டவர்.
மணிவாசகர் அருளிய திருவாசகத்தை முற்றோதல் வழி தம் இசைத்திறத்தால் அகிலமெலாம் கொண்டு சேர்க்கும் அருளாளர்.
திருவாசகம் மட்டுமன்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரத்தையும் முற்றோதல் மூலம் சைவம் போற்றும் உயரிய பணியினை அயராது ஆற்றி வருகிறார்.
பொருட்பற்றின்றி அருட்பற்றொன்றையே பற்றிவாழும் பெரும் பேறாளர்.தம் சீடர்களையும் அடியார்களையும் பேணும் சீராளர்.
Location:
goo.gl/maps/7dbqbD9T7PiE2z5B6
Contact :
9080909979, 9025882296
@SIVA GYANAVITHTHU @SIVA DHAMODARAN IYYA @Sivayam
#சிவதாமோதரன்ஐயா #SivaDhamodaranIyya #thiruvasagasiddhar #sivagyanaviththu #thiruvasagam #sivam #thirukalukundram #sivayanama