நாம் எல்லோரும் பிரபஞ்சத்தின் அங்கம்தான் .. ஐம்பூதங்கள் அண்டத்தில் உள்ளதைப்போலவே பிண்டத்திலும் நிலம் ,நீர் ,காற்று, ஆகாயம், நெருப்பு சக்தியோட்டமாக இருக்கிறது இதையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளத்தே பிண்டத்திலும் என்றார்கள் .
பிரபஞ்சம் எல்லாம் நமக்கு ஏற்கனவே கொடுத்து விட்டது அது நம் எண்ணங்களால் வடிவம் பெறுகிறது.அதை வடிவம் நேர்மறையாக கொடுத்தால் நேர்மறையாகவும் எதிர்மறையாக கொடுத்தால் எதிர்மறையாகவும் வடிவம் பெறுகிறது.
தளராத உறுதியான நம்பிக்கையும் நன்றி உணர்வும் பிரபஞ்சத்திடம் வேண்டியதை பெற வழிவகுக்கும் .அதைப்பற்றிய தொகுப்புகளை இந்த பக்கத்தில் காணலாம்..
வாழ்க மகிழ்வுடன்