“வார்த்தைகள் தோல்வியடைந்த இடத்தில், இசை பேசுகிறது”
இதயத்திற்கும் இசைக்கும்
இணைந்த பந்தமே உண்டு!
நேசத்தை நிரப்பி..
.வாசமாக்கியே
வளர்க்கின்ற
காதல்
பயிரதன்
நீரென நிறைந்திருப்பது
வசியம் செய்யும் மாயமிங்கு
ஈடில்லா
'இசையே '... ❤
இசை என்பது மொழியை மீறிய ஒரு கலை வடிவமாகும். இசை நாம்முடைய வாழ்வில் இன்பம் துன்பம் வந்த போகையில் நம் மனதிற்கு அமைதியை தந்து புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள இயற்கை நமக்கு அளித்த அற்புதமான பரிசுதான் இசை.
நாம் அன்றாட வாழ்வில் இசையை தினமும் கேட்டுகொண்டு வருகிறோம் உலகில் அனைத்துவிதமான மொழியினரும் விரும்பும் விதமாக அமைந்துள்ளது. நோய்களைத் தீர்க்கும் ஒரு மருந்து உண்டென்றால் அது இசைதான். எந்த போதைக்கும் அடிமையாகாதவர்கள் கூட இசைக்கு அடிமையாகிவிடுவார்கள். தனிமை, தூக்கம், சோகம், துக்கம், இன்பம், துன்பம் போன்ற அனைத்துக்கும் ஒரே தீர்வாக இசை நமக்கு அமைகிறது.
இசை நமக்கு துணையாகவும், தோழனாகவும், தாலாட்டுப்பாடியும் நம்மை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இசைக்கு மொழிகளே இல்லை, எந்த மொழி பேசுபவர்களாக இருப்பினும் இசையானது அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளங்கும்.